வானில் முழு நிலவினைக்
கண்டேன் ...
தோட்டத்தில் அழகான மலர்களைக்
கண்டேன் ...
கடலில் அலைபாயும் அலைகளைக்
கண்டேன் ...
அனைத்தையும் கண்ட நான்
உன் இதயத்தைக் காண
மறந்தேன் ...
அதனுள் இருக்கும் என்னைக்
காண மறந்தேன் ...
என்னைப் பார்க்க மறந்த போதிலும்
உன்னை என் இரு விழிகளில்
காண்கிறேன் ...
உன்னை என் கருவறையில்
கண்டேன் ... என் குழந்தையாக
அல்ல ... என் உயிராக ...
No comments:
Post a Comment