Tuesday, June 14, 2011

En vaalkai payanam

விடியாத ஒவ்வொரு இரவும் விடிந்தது என உன்னைக்கண்டேன் என் வாழ்வின் விடிவெள்ளியாக. என்  வாழ்க்கையின்  ஒவ்வொரு  நொடியும்   நிமிடமும் என்னால் நிர்ணயிக்க இயலவில்லை. தென்றல் வீசிய என் வாழ்க்கையில் புயலும் வீச தொடங்கிவிட்டது.  என்  கண்களுடன் போராடும் கண்ணீரும், துன்பத்தில் போராடும் என் இதயமும்  என்   வலிமைக்கும் அப்பார்ப்பட்டு போராடுகின்றன. என் தவத்திற்குக் கிடைத்த புதையலை இன்று என் கையை விட்டு நீங்கிவிடும் என்று பயம் ஒரு பக்கம் மனதில் தீ பிழம்பைக் கொட்டுகின்றது. இறைவன் அளித்த இந்த வாழ்க்கை எனக்கு இழப்பை மட்டுமே தந்துள்ளது. இன்று என் இரு  விழிகளும்   உன்னுடன்  இருந்த  நேரங்களை  எண்ணியே  கண்ணீரில்  தத்தளிக்கின்றன.  நீ  விதித்த  கொள்கைகள்  இன்று  என்னை  ஒவ்வொரு வினாடியும் உள்ளுக்குள்ளே கொன்றுவருகிறது.  
இவை  அனைத்தும் விதி  விட்ட  லீலைகளே...  இதுதான்   போராட்டங்களால்   நிறைந்திருக்கும்  என்  போராத    வாழ்க்கை...  
   

No comments:

Post a Comment